‛‛உறுதியானது தூக்கு’’.. செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
டெல்லி: நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப் தனது தூக்கு தண்டனையை குறைக்க கூறிய கருணை மனுவை ஜனாதிபதி திரெளபதி முர்மு நிராகரித்தார். இதனால் அவருக்கு தூக்கு உறுதியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று செங்கோட்டை. இந்நிலையில் தான் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக முகமது ஆரிப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இவர் தாக்குதல் நடந்த 4வது நாளில் சிக்கினார். விசாரணையில் அவர் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் எல்இடி எனும் லஷ்கர் இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு என்பது 2007 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு முகமது ஆரிப்புக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2011ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த தண்டனை மறுஆய்வு மனு 2012ம் ஆண்டிலும், சீராய்வு மனு 2014ம் ஆண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. கடைசியாக பயங்கரவாதி முகமது ஆரிப் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு செய்தார்.
இந்த கருணை மனு என்பது மே 15ம் தேதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 27 ம் தேதி அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் முகமது ஆரிப்புக்கான தூக்கு தண்டனை என்பது உறுதியாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications