டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவு.. அமித்ஷாவையே அசரடித்த ஏபிவிபி.. எத்தனை இடம் தெரியுமா?
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன-இதில் மொத்தமுள்ள 4 இடங்களில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு மூன்று இடங்களை வென்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீதான நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்றார்.

டெல்லி பல்கலைக்கழகம் இந்தியாவின் மிக முக்கியமான பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு நடைபெறும் மாணவர் சங்க தேர்தல் மிகவும் பிரபலம் ஆகும்.
தேசிய கட்சிகள் கூட இந்த தேர்தலில் தங்கள் அமைப்பினரை களத்தில் இறக்கும். அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியிலும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் NSUI முன்னணியில் இருந்து வந்தது. இதேபோல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில் இறுதியாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைவர் பதவியை பாஜகவின் ஏபிவிபி அமைப்பு கைப்பற்றி உள்ளது. அதேநேரம் துணை தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் NSUI அமைப்பு கைப்பற்றி உள்ளது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) துஷார் தேதா, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI இன் ஹிதேஷ் குலியாவை தோற்கடித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸ் மாணவர் பிரிவின் அபி தஹியா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார். செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் அப்ரஜிதாவும், இணை செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் சச்சின் பைஸ்லாவும் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அமோகமாக வெற்றி பெற்றதற்காக அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீது இளம் தலைமுறையினரின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்களையும் தேசிய உணர்வையும் இளைஞர்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருக்க ஏபிவிபி மாணவர்கள் உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று முழு நம்பிக்கை இருக்கிறது" என்று அமித்ஷா கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications