டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவு.. அமித்ஷாவையே அசரடித்த ஏபிவிபி.. எத்தனை இடம் தெரியுமா?
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன-இதில் மொத்தமுள்ள 4 இடங்களில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு மூன்று இடங்களை வென்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீதான நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்றார்.

டெல்லி பல்கலைக்கழகம் இந்தியாவின் மிக முக்கியமான பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு நடைபெறும் மாணவர் சங்க தேர்தல் மிகவும் பிரபலம் ஆகும்.
தேசிய கட்சிகள் கூட இந்த தேர்தலில் தங்கள் அமைப்பினரை களத்தில் இறக்கும். அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியிலும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் NSUI முன்னணியில் இருந்து வந்தது. இதேபோல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில் இறுதியாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைவர் பதவியை பாஜகவின் ஏபிவிபி அமைப்பு கைப்பற்றி உள்ளது. அதேநேரம் துணை தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் NSUI அமைப்பு கைப்பற்றி உள்ளது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) துஷார் தேதா, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI இன் ஹிதேஷ் குலியாவை தோற்கடித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸ் மாணவர் பிரிவின் அபி தஹியா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார். செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் அப்ரஜிதாவும், இணை செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் சச்சின் பைஸ்லாவும் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அமோகமாக வெற்றி பெற்றதற்காக அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீது இளம் தலைமுறையினரின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்களையும் தேசிய உணர்வையும் இளைஞர்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருக்க ஏபிவிபி மாணவர்கள் உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று முழு நம்பிக்கை இருக்கிறது" என்று அமித்ஷா கூறினார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications