புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற பேரன்!
டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் தராத தனது பாட்டியை சுத்தியால் குத்திக் கொன்ற 19 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் ஷஹ்தாராவில் உள்ள ரோஹ்தாஷ் நகரில் வசித்தவர் 73 வயது மூதாட்டி சதீஷ் ஜோலி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் - மூத்த மகன் சஞ்சய் ஒரே வீட்டில் முதல் மாடியில் வசிக்கிறார், இளையவர் மனோஜ் அருகில் வசிக்கிறார். சஞ்சய், மளிகை கடை வைத்திருக்கும், இவரத மகன் கரண் வயது 19. மீரட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் மூதாட்டி சதீஷ் ஜாலி இவர் சனிக்கிழமை கொல்லப்பட்டார். அவர் பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மறுநாள் காலை மூதாட்டி சதீஷின் மகன் சஞ்சய் அவரை தேடி கீழே வந்தபோது கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அச்சம் அடைந்தார்,
பின்னர் தனது சகோதரர் மனோஜை அழைத்தார், அவரும் தன் தாய் தன்னுடன் இல்லை என்று தெரிவித்தனர். இறந்த உடலைக் கண்டுபிடிப்பதற்காக இருவரும் அவரது அறையின் பூட்டை உடைத்தனர். அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மூதாட்டி சதீஷ் பார்த்த கடைசி நபர் கரண் தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பேரனே பாட்டியை கொன்றது தெரிய வந்தது. போலீசார் இதுபற்றி கூறுகையில் புத்தாண்டு விருந்துக்கு தனது பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தர மறுத்துவிட்டார் அவரது பாட்டி. இதனால் ஆத்திரம் அடைந்த கரண் அவரது பாட்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு 18000 பணத்தை திருடிவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து கரணை கைது செய்துள்ளாம் என்றார்கள்.