பதற்றம் தணியுமா? இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக் கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

கடந்த புதன்கிழமை இந்த அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்தனர். இதற்காக பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குததலை நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தியா கொடுத்த பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனாலும் மீண்டும் அடாவடியாக பாகிஸ்தான் டிரோன்களை ஏவியது. இதற்கும் இந்தியா தக்க பதிலடியை கொடுத்தது. இரவுக்கு பிறகு இந்த தாக்குதல் இல்லை. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்கள் நீடித்து வந்த போர் பதற்றம் சற்று தணிந்தது. நேற்று முதல் எல்லையோர மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது.
பாகிஸ்தான் இனி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடருகிறது. பாகிஸ்தான் தனது அத்துமீறலை தொடர்ந்தால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக் கட்டமாக, இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையேயான பெச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்கள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. மதியம் 12.00 மணியளவில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications