அடேங்கப்பா! தமிழ்நாடு நிறுவனம் இத்தனை கோடி மோசடி செய்ததா? பரிதாபகரமான நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி
டெல்லி: ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் நிறுவனத்தின் செயல்படாத வங்கி கணக்கில் இருந்து ரூ.2,060 கோடி கடன் மோசடி நடைபெற்று இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து இருக்கிறது
பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ.824.06 கோடி கடன் மோசடி செய்துவிட்டு தொழிலதிபர் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் நடைபெற்ற மோசடிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் நிரவ் மோடியை மிஞ்சும் அளவுக்கு மோசடி நடைபெற்ற மோசடி குறித்துபஞ்சாப் நேஷனல் வங்கி வாய்திறந்து உள்ளது.

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனம்
மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, குர்கான் ஆகிய இடங்களில் கிளைகளை பரப்பி இருக்கும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிறுவனமான (IL&FS) ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்
இதனிடையே இந்த நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.2,060.14 கோடி கடன் மோசடி நடந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து இருக்கிறது. செயல்படாத இந்த வங்கிக் கணக்கின் மூலம் டெல்லி மண்டல அலுவலகத்தில் இருந்து இந்த மாபெரும் மோசடி அரங்கேறி இருப்பதை பஞ்சாப் நேஷனல் வங்கி உறுதிபடுத்தி உள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் புகார் - மோசடி என அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இந்த நிறுவனம் ரூ.148 கோடி கடனை செலுத்தாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கியிடம் தாங்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் அது மோசடி என்று அறிவிக்கப்பட்டு இருப்பதையும் பஞ்சாப் நேஷனல் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிலுவையில் வைத்திருந்த கடன் தொகை ரூ.94,000 கோடியாக இருந்தது. இதனை சிறிது சிறிதாக அந்த நிறுவனம் செலுத்தி வந்தது.

கடலூர் அனல் மின் திட்டத்துக்காக கடன்
ஆனால், ஐ.எல்.எஃப்.எஸ். தமிழ்நாடு பவருக்காக பெற்ற ரூ.2,060.14 கோடியை அந்த நிறுவனம் இன்னும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளது. இதைதான் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாக அறிவித்து இருக்கிறது. Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) நிறுவனத்தின் மூலம் கடலூரில் அனல் மின் திட்டங்களுக்கான கட்டமைப்பை நிறுவி செயல்படுத்துவதற்காக ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications