இந்தியாவின் 'யுபிஐ'.. சிங்கப்பூரின் 'பே நவ்' இணைப்பு.. ஆஹா இவ்வளவு பலன்களா.. சூப்பர்!
இந்த இணைப்பின் மூலம் தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையே வெறும் செல்போனை பயன்படுத்தியே பணம் அனுப்ப முடியும்.
டெல்லி: இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையான யுபிஐ (UPI) மற்றும் சிங்கப்பூரின் பணப்பரிமாற்ற முறையான 'பே நவ்' (Pay Now) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
2021-ம் ஆண்டே இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளையும் இணைக்க மேற்கொண்ட முயற்சி இன்றுதான் கைக்கூடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த இணைப்பால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. யார் யார் பலனடைவார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
காகித பணப்பரிவர்த்தனைக்கு பதிலாக, டிஜிட்டல் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்தியாவில் இந்த நடைமுறை 8 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டாலும், கொரோனாவுக்கு பிறகுதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பெரும்பாலானோர் மேற்கொள்ள தொடங்கினர்.

இந்தியாவின் யுபிஐ
இந்தியாவை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையான யுபிஐ மூலம் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பல யுபிஐ ஆப்களும் இருக்கின்றன. கூகுள் பே, பேடிஎம், பாரத் பே போன்ற ஆப்களை பொதுவாக ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒருவரின் செல்போன் எண் அல்லது வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றின் மூலமே இந்தியாவுக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த யுபிஐ ஆப்கள் மூலமாக நாம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். வங்கிக்கணக்கு எண் விவரங்களை ஏதும் தர தேவையில்லை என்பதாலும், விரைவாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாலும் இந்த முறையை பலரும் விரும்புகிறார்கள்.

யுபிஐ - பே நவ் இணைப்பு
இந்தியாவில் எப்படி யுபிஐ இருக்கிறதோ, அதுபோலே சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடிப்படையாக இருக்கும் முறைதான் 'பே நவ்'. கிட்டத்தட்ட யுபிஐ போலவேதான், விபிஏ முகவரியின் (VPA Address) அடிப்படையில் இதில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்குள் இருக்கும் இரு நபர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த 'பே நவ்' முறையை பயன்படுத்தி பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ளவோ, அனுப்பவோ முடியும். இந்நிலையில்தான், இந்த இரு நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளான யுபிஐ, பே நவ் இணைக்கப்பட்டுள்ளன.

யாருக்கு பலன்?
இந்த இணைப்பின் மூலம் தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையே வெறும் செல்போனை பயன்படுத்தியே பணம் அனுப்ப முடியும். பொதுவாக, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புவதை வங்கிகளின் அந்நிய செலாவணி முறையின் மூலமாகவே மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போது டிஜிட்டல் மூலமாகவே பணத்தை அனுப்பவும், சிங்கப்பூரில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பணத்தை பெறவும். சிங்கப்பூரில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications