ரூ.15 லட்சம் போடுறதா சொன்னீங்களே.. என்னாச்சு.. நாடாளுமன்றத்தை அதிர வைத்த திமுக எம்பி கிரிராஜன்
டெல்லி: வெளிநாடுகளில் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமென்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி என்னவாயிற்று? என பாஜக அரசுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தெடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்று பேசிய தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், "தமிழ்நாட்டில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றி வருகிறது.

அதில் ஒன்றான, மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியவிலேயே முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியாவிலே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசோ இதுவரை மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை . இது பா.ஜ.க அரசின் மிகப்பெரிய தேர்தல் ஜும்லாவாக உள்ளது.
வெளிநாட்டில் உள்ள பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமென்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? அதேபோல அனைத்து நதிகளை இணைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதுவும் இதவரை நடக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மாறாக விவாசாயிகளின் கடன் அதிகரித்து அவர்களின் தற்கொலைகள்தான் இரட்டிப்பாகியுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புதிய வேலைகளை வழங்குவோம் என்ற ஒன்றிய பாஜக அரசின் வாக்குறுதி என்னவாயிற்று? தற்போது இந்தியாவில் வேலையில்லா பிரச்சனைத்தான் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டு ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஜும்லாவாக உள்ளது" என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன் விமர்சித்துள்ளார்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications