Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கொடி டிபி.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற திமுக எம்பி! அங்கதான் “டுவிஸ்ட்”

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சமூக வலைதள கணக்குகளில் புரொபைல் படமாக வைக்க பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை ஏற்பதாக திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது.

கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மன் கி பாத்

மன் கி பாத்

இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மன் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மன் கி பாத் உரை மிகவும் சிறப்புமிக்கது.

75 வது சுதந்திர தினம்

75 வது சுதந்திர தினம்

அதற்கு முக்கிய காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நான் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

டிபி மாற்றிய பிரதமர்

டிபி மாற்றிய பிரதமர்

ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.

 திமுக எம்.பி. பதிவு

திமுக எம்.பி. பதிவு

இது தொடர்பாக திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதில், "75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ய கோரியுள்ளார். அவரது கோரிக்கை ஏற்று இந்த படத்தை நான் பதிவிடுகிறேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ள அவர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை தாங்கி நிற்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+