நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க விவகாரம்.. மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
டெல்லி: நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க விவகாரத்தில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கியிருந்தார். இந்த அனுமதிக்கு எதிராக தற்போது உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி 100க்கும் மேற்பட்ட மக்களவை எம்பிக்கள் கையெழுத்து போட்டு சபாநாயகரிடம் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த பதவி நீக்க தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பிக்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications