ஆஹா! குட் நியூஸ்! புதிய வழித்தடத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்! உங்கள் ரூட் இருக்கானு பாருங்க!
டெல்லி: இந்தியாவில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே தொடங்கவுள்ளது. அவை என்னென்ன வழித்தடங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களை உள்ளடக்கிய வந்தே பாரத் ரயில்கள் 15 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களளை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

ரயிலில் ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும்.
ஒரு டம்ளர் தண்ணீரை வழிய வழிய வைத்தாலும் சிந்தாமல் சிதறாமல் இருக்கும் அளவுக்கு ஸ்மூத்தாக இந்த ரயில் செல்லும். அதே நேரத்தில் வேகமும் அதிகமாக இருக்கும். அண்மையில்தான் காசர்கோடு - திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 5 வந்தே பாரத் ரயில்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 5 ரயில்களில் முதல் ரயில் பூரி - ஹவுரா வழித்தடத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்த மாதம் தொடங்கப்படும். ஒடிசாவில் முதல் ரயிலையும், தென்கிழக்கு ரயில்வேயின் இரண்டாவது ரயிலையும் தொடர்ந்து, புதிய ஜல்பைகுரி - குவஹாத்தி வழித்தடத்தில் அதிவேக ரயில் தொடங்கப்படும். வடகிழக்கு இந்தியாவில் இயக்கப்படும் ரயிலின் முதல் யூனிட் இதுவாகும். இதைத் தொடர்ந்து, பாட்னா - ராஞ்சி வழித்தடத்தில் அதிநவீன ரயிலை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம், போஹார் அதன் முதல் வந்தே பாரத் ஆகும். ஹவுரா - பூரி வழித்தடத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, ஒடிசா அரசு புவனேஸ்வர் - ஹைதராபாத், பூரி - ராய்ப்பூர் மற்றும் பூரி - ஹவுரா வழித்தடங்களில் மேலும் அரை - அதிவேக ரயில்களை சேர்க்க வலியுறுத்தியுள்ளது.

பூரி-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட்டு ஒடிசாவில் உள்ள பூரியை 11:50 மணிக்கு வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வந்தே பாரத் மதியம் 2 மணிக்கு பூரியில் இருந்து புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு ஹவுராவை வந்தடையும்.
குர்தா சாலை சந்திப்பு, புவனேஸ்வர், கட்டாக், ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை, பத்ரக், பாலசோர் மற்றும் ஹல்டியா நிலையங்கள் அனைத்தும் பூரி - ஹவுரா ரயிலின் நிறுத்தங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சேர் காருக்கு ரூ. 1,590 (உணவு உட்பட ரூ. 308) மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ. 2,815 (கேட்டரிங் செய்ய ரூ. 369) என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பயணி "உணவு இல்லை" என்பதைத் தேர்வு செய்தால், டிக்கெட் விலையில் கேட்டரிங் சேர்க்கப்படாது. இந்த 5 வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயிலை வரவேற்க மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications