நவீன மருத்துவம் பற்றி சர்ச்சை கருத்து.. பாபா ராம்தேவ் எதிர்த்து கருப்பு தினம்..இந்திய மருத்து சங்கம்
டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவர்களுக்கு எதிராகக் கூறிய கருத்துக்களுக்கு எதிராக இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று கருப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.
பாபா ராம்தேவ்விற்கு இந்திய மருத்துவ சங்கத்தினருக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியது.

ஆனாலும், தற்போது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பாபா ராம்தேவ் எதிர்த்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தொழிலதிபர். தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்.
அவர் தொடர்ந்து அலோபதி மற்றும் நவீன மருத்துவம் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். இதன் மூலம் ராம்தேவ் அங்கீகரிக்கப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய மருந்துகள் விற்க முயல்கிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(ஜூன் 1) பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவர்களுக்கு எதிராகக் கூறிய கருத்துக்களுக்கு எதிராக இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று கருப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications