மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதிய கெஜ்ரிவால்! டெல்லி சட்டசபை தேர்தலில் என்ன நடக்கும்? கவனிக்கும் பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தார். அமலாக்கத்துறை, சிபிஐ கைதை தொடர்ந்து கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது முதல்வராக அந்த கட்சியை சேர்ந்த அதிஷி உள்ளார்.

விரைவில் டெல்லியில் சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. அதாவது அடுத்த மாதம் (பிப்ரவரி) டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம். டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சிக்கு 36 இடங்கள் தேவை.
இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் அரசியல்களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆம்ஆத்மி கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் இந்த முறையும் வென்று ஹாட்ரிக் முறையில் ஆட்சியை தக்கவைக்க அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் டெல்லி தலைநகராக உள்ளதால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜகவும் வியூகம் வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் இழந்த செல்வாக்கை மீட்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாஜக செய்யும் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் உடந்தையாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக மோகன் பகவத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக டெல்லியில் ஆர்எஸ்எஸ் பிரசாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜக பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க நினைக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தலித் மற்றும் புர்வாஞ்சாலிஸ் மக்களின் பெயர்களை அதிகளவில் நீக்கி உள்ளது.
பாஜகவின் இத்தகைய செயல் ஜனநாயகத்துக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? அதேபோல் டெல்லியில் பிரசாரம் செய்ய வருவதற்கு முன்பாக பாஜக செய்யும் தவறுகளுக்கு ஆர்எஸ்எஸ் சப்போர்ட் செய்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆம்ஆத்மி கட்சி மீது பாஜக பகிரங்கமாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது வாக்கி வங்கி அரசியலுக்காக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியினர் ரோஹிங்ஹியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இஸ்லாமியர்களை அழைத்து வந்து டெல்லியில் சட்டவிரோதமாக தங்க வைத்து ஓட்டுரிமையை பெற்று கொடுக்கின்றன என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதிலடியாக அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது குற்றம்சாட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications