Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமானிய மக்கள் தலையில் மத்திய அரசின் பேரிடி-வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்திய நிலையில் தற்போது வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.550-க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853-க்கு விற்பனை செய்யப்படும்.

LPG cylinder union govt

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.43,000 கோடியை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

தற்போது சந்தையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக மத்திய அரசு, பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய கையோடு தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது சாமானிய மக்களுக்கு பேரிடியாகிவிட்டது.

சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக

மத்திய அரசின் சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப் பெருந்தகை கூறுகையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+