போதைப்பொருள் வழக்கு.. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்.. காவலை நீட்டித்து டெல்லி கோர்ட் அதிரடி
டெல்லி: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அவர் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் கடத்தப்பட இருந்த ரூ. 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது ஜாபர் சாதிக் பிடிபட்டார். இதையடுத்து, அவரை டெல்லி அழைத்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
தற்போது டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை வரும் 29 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாபர் சாதிக் உடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சதானந்தம், முஜிபுர், முகேஷ் , அசோக் குமார் ஆகியோரையும் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் காவலும் வரும் 29 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications