குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
டெல்லி: குளிர் காலங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலமாக கேள்விகளுக்கு ஞாயிறுதோறும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் அர்தன் சண்டே சம்வாத் என்ற நிகழ்ச்சி மூலம் பதிலளித்து வருகிறார். இந்த வார சண்டே சம்வாத் நிகழ்ச்சியில் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

குளிர்காலத்தில் அதிகரிக்கும்
பொதுவாக சுவாச பிரச்சனைகளை உருவாக்கும் வைரஸ்கள் குளிர்காலங்களில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும். குளிர்காலங்களில் வீடுகள் உள்ளிட்டவைகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும். இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் இந்தியாவிலும் குளிர்காலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்துகளை நிராகரிக்க முடியாது. இது அச்சமூட்டுவதற்கான தகவல் அல்ல. எச்சரிக்கைக்குரியதுதான்.

3 மாநிலங்கள் தவிர
கொரோனாவுக்கான சிகிச்சை முறையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்த அறிவியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 கோடி நிதி வழங்கப்பட்டுவிட்டன. 3 மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்திவிட்டன.

தடுப்பூசி சோதனைகள்
கொரோனா தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் 3-வது கட்ட பரிசோதனைகளும் தொடங்க உள்ளன.

பெலுடா விரைவில் அறிமுகம்
கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும். 2000 நோயாளிகளுக்கு ஏற்கனவே பெலுடா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவை 98% துல்லியமாக பெலுடா சோதனைகள் கண்டுபிடித்திருக்கின்றன. பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றன.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications