சோனியா காந்தி விடுத்த கோரிக்கை.. டக்கென ஏற்றுக்கொண்ட அமலாக்க துறை! இது நேஷனல் ஹெரால்டு விசாரணை
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் மாற்றப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகச் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் இது சர்ச்சையானது. அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது.

விசாரணை
அமலாக்கத் துறை தொடர்ந்து இருந்த அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கடந்த வாரம் ராகுல் காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜரானார். முதலில் மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொஞ்சம் பிரேக் விட்டு மீண்டும் இரு நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி
5 நாட்களில் மொத்தம் 50 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கேள்விகளால் துளைத்து எடுத்து உள்ளனர். இதனிடையே சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்தச் சூழலில் தான், இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி
இதனிடையே மருத்துவர்கள் பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகச் சோனியா காந்தி அவகாசம் கோரி இருந்தார். இது குறித்து காங்கிரஸின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "சோனியா காந்தியை வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறைக்கு கடிதம் எழுதியுள்ளார், அவர் முழுமையாகக் குணமடையும் வரை விசாரணையை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

ஏற்பு
ராகுல் காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சோனியா காந்தி இப்போது மருத்துவ காரணங்களால் அவகாசம் கோரி உள்ளார். சோனியா காந்தியின் இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து சோனியா காந்திக்கு விரைவில் புதிய சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அவர் எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications