வந்தது லோக்சபா திருவிழா... 7 கட்டங்களாக வாக்குப் பதிவு... அறிவித்தது தேர்தல் ஆணையம்
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் இடைத்தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு 9 கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன்படி இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசேக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சமயம் அவர் கூறுகையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
அதில் ஏப்ரல் 11-ஆம்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 , 3 -ஆவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23, 4-ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29, 5-ஆம் கட்ட தேர்தல் மே 6, 6-ஆம் கட்ட தேர்தல் மே 12, 7-ஆம் கட்ட தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான கடைசி தேதி மார்ச் 26 ஆகும். மனுக்களை பரிசீலிக்க மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும். அதை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 29 ஆகும்.












Click it and Unblock the Notifications