வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுகிறதா? சர்ச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில்
டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவதாக வெளியாகும் வீடியோக்களில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட வாய்ப்பே இல்லை என மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெற்றதுமே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சீல் செய்யப்படுகிறது. அதுவும், அனைத்து வேட்பாளர்கள் முன்பாகத்தான் இந்த பணி வீடியோ பதிவோடு நடக்கும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. வெளியே, சிபிஏஎப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா ஒரு பிரமுகர், பிரதிநிதியாக அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுகிறார்கள் என்பது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications