மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதி நாளை (மார்ச் 15) இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்ற தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு என்பது மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மார்ச் 15ம் தேதிக்கு பிறகு மார்ச் 16 அல்லது ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போக சில முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்
அதாவது தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட இடங்களில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் SIR நடவடிக்கைக்கு பிறகு இறுதி வாக்காளர்கள் பட்டியல் பிப்ரவரி 28 ம் தேதி தான் வெளியானது.
மேலும் விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்கும் வகையிலான மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 15 (நாளை) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது முதல் காரணமாகும்.
2வது மற்றும் 3வது காரணம்
அதேபோல் நாளை மாநிலங்களவைக்கான தேர்தல் (ராஜ்யசபா) தேர்தல் நடைபெற உள்ளது. இது 2வது காரணமாகும். அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தேர்தல் தேதியை அறிவிப்பது சட்ட பிரச்சனையை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இது 3வது காரணமாகும்.
தமிழகம் - புதுச்சேரியில் ஒரே கட்ட தேர்தல்
இதனால் தான் தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதிக்கு பிறகு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் இந்த முறை குறைந்த கட்டங்களாக விரைவாக தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கம்போல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மாறாக அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
தேர்தல் சமயத்தில் மேற்கு வங்கத்தில் பல பிரச்சனைகள் வெடிக்கும். இதானல் அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரை விட அதிகளவில் மத்திய காவல் படையினர் மேற்கு வங்கத்தில் குவிக்கப்பட உள்ளனர்.
மத்திய ஆயுதக் காவல் படையினரின் (CAPFs) 2024 ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் 1.4 லட்சம் (1,500 கம்பெனிகள்) பேர் பயன்படுத்தப்பட்டனர். தற்போது மேற்கு வங்கத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 45,000 (500 கம்பெனிகள்) CAPF காவலர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications