57 ராஜ்யசபா சீட்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. அன்றே முடிவுகள் அறிவிப்பு!
டெல்லி: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட, மே 24ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம், மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்ப பெற ஜூன் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications