Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜிஹாத் கண்ட்ரோல் போர்ட்".. ஜேசிபிக்கு புதுவிளக்கம் அளித்த பாஜக எம்பி.. பரபரப்பு கருத்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று துவங்கியது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாஜக எம்பி நரசிம்மராவ், ‛‛ஜேசிபி என்பது ஜிகாத் கட்டுப்பாடு வாரியம்'' என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்ல வன்முறையானது. வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில் தான் டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை ஜேசிபி வாகனம் மூலம் கடைகள், வீடுகள் அகற்றும் பணி துவங்கியது. வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே தான் ஆக்கிரமிப்பு அகற்ற டெல்லி உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி உடனடியாக நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால் ஆக்கிரமிப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியில் நீதிமன்றம் உத்தரவிட்ட 2 மணிநேரத்துக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

ஜேசிபிக்கு புதுவிளக்கம்

ஜேசிபிக்கு புதுவிளக்கம்

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம் மக்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் பாஜகவின் எம்பி நரசிம்மராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛JCB என்பது ஜிகாத் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(Jihad Control Board) சமமானது. ஜேசிபி என்பது புல்டோசரை குறிக்கும்'' என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடரும் கருத்து மோதல்கள்

தொடரும் கருத்து மோதல்கள்

இதனால் பாஜக அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஓவைசி, ஆம்ஆத்மி, காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் பாஜகவினரோ வேறு ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களை விரட்ட தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக பாஜகவின் கபில் மிஸ்ரா தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் ஆம்ஆத்மி, பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+