இனி 8 நாள் போதும்.. நாடு முழுக்க அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. EPFO வெளியிட்ட அறிவிப்பு!
டெல்லி: வருங்கால வைப்பு நிதி நிறுவனமான இபிஎஃப்ஓ (EPFO), ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்படும் பிஎஃப் கோரிக்கைகளை (Claims) வெறும் 8 நாட்களில் தீர்வு கண்டு வருவதாகத் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.

சாதனை படைக்கும் கிளைம் செட்டில்மென்ட்
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தாக்கல் செய்த தரவுகளின்படி, நடப்பு 2025-26 நிதியாண்டில் (ஜனவரி 23 வரை) மட்டும் 8.53 கோடிக்கும் அதிகமான கிளைம்களை இபிஎஃப்ஓ கையாண்டுள்ளது. இது கடந்த 2024-25 நிதியாண்டில் கையாளப்பட்ட 7.7 கோடி என்ற எண்ணிக்கையை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 27 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களின் சுயவிவரத் திருத்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
'இபிஎஃப்ஓ 2.0': டிஜிட்டல் புரட்சியின் முக்கிய அம்சங்கள்
பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக 'Unified Portal' மற்றும் 'Field Office Application' ஆகியவற்றை உள்ளடக்கிய EPFO 2.0 மென்பொருள் மூலம் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன:
நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை: இ-கேஒய்சி (e-KYC) முழுமையாக முடிக்கப்பட்ட கணக்குகளைக் கொண்ட ஊழியர்கள், தங்கள் பிஎஃப் தொகையை மாற்ற (Transfer Claim) இனி முதலாளியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. நேரடியாக ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம்.
வேகமான கிளைம்கள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய டிஜிட்டல் மாற்றங்களால், பிஎஃப் (PF) கிளைம்கள் இப்போது வெறும் 8 நாட்களில் செட்டில் செய்யப்படுகின்றன. நடப்பு 2025-26 நிதியாண்டில் மட்டும் இதுவரை 8.53 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளை இபிஎஃப்ஓ வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது.
சுமார் 27 லட்சம் பேர் தங்கள் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே சரி செய்துள்ளனர்.
'இபிஎஃப்ஓ 2.0' - ஊழியர்களுக்கான 4 முக்கிய வசதிகள்
பிஎஃப் சந்தாதாரர்களின் வேலையை எளிதாக்க கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்கள்:
உங்கள் கணக்கில் e-KYC முழுமையாக முடிந்திருந்தால், பணத்தை மாற்ற (Transfer) இனி நிறுவனத்தின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்களே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
'உமாங்' (UMANG) செயலி மூலம் உங்கள் முகத்தைக் காட்டியே (Face ID) நீங்களே உங்கள் UAN எண்ணை உருவாக்கிக்கொள்ளலாம்.
பெயர் அல்லது பிறந்த தேதியில் தவறு இருந்தால், நீங்களே ஆன்லைனில் திருத்தம் செய்ய புதிய 'Simplified Joint Declaration' முறை அறிமுகமாகியுள்ளது.
புதிய CPPS முறைப்படி, ஓய்வூதியதாரர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள எந்த வங்கி கிளையிலும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிர்வாக சீர்திருத்தங்கள்
Member Passbook Lite: சமீபத்திய வரவு-செலவு கணக்குகளை மிக எளிமையாகப் பார்க்கலாம்.
பிழையற்ற கணக்கு: மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் உங்கள் பிஎஃப் கணக்கு விவரங்கள் உடனுக்குடன், தவறுகளின்றி அப்டேட் செய்யப்படுகின்றன.
PMVBRY போர்டல்: புதிய ஊழியர்களைப் பதிவு செய்யவும், சலுகைகளைப் பெறவும் நிறுவனங்களுக்குத் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி, மிக வேகமாகவும், வெளிப்படையாகவும் பிஎஃப் பணத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதன் ஊழியர் சேர்க்கை திட்டத்தின் கீழ் பதிவு செய்த பணியாளர்கள், ஒரே ஒரு நாள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்று அறிவித்துள்ளது.
இபிஎஃப்ஓ-வின் ஊழியர் சேர்க்கை இயக்கம், பணியில் இருக்கும்போது ஊழியர் மரணமடைந்தால், அவரது குடும்பத்திற்கு இந்த ஓய்வூதிய பலனை உறுதி செய்கிறது. இதற்கு குறிப்பிட்ட படிவங்கள், உதாரணமாக படிவம் 10D, பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும், முதலாளி தனது பங்களிப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.
ஈபிஎஸ்-95 (பணியாளர் ஓய்வூதிய திட்டம்-1995) விதிகளின் கீழ் செயல்படும் இத்திட்டம், ஊழியரின் மனைவி/கணவர், குழந்தைகள், மற்றும் பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. ஓய்வூதியத் தொகை, ஊழியரின் ஊதியம் மற்றும் சேவை காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்த மகத்தான பலன், பணியில் இருக்கும்போது மரணமடைந்தால் மட்டுமே பொருந்தும். பணியாளர் சேர்க்கை திட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி கவரேஜுக்கு வெளியே இருந்த தொழிலாளர்கள் கூட, ஒருமுறை பதிவு செய்தவுடன் குடும்ப ஓய்வூதியப் பாதுகாப்பைப் பெற முடியும்.












Click it and Unblock the Notifications