எல்லாப் பெருமையும் மாநிலங்களுக்கே.. நிதி ஆயோக் கூட்டத்தில் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி!
டெல்லி : டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நடைபெறும் கவுன்சில் குழுவின் முதல் நேரடி கூட்டம் இது.
இந்தக் கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 23 மாநில முதலமைச்சர்கள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக் கூட்டம்
நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெ ல்லியில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் 23 மாநில முதலமைச்சர்கள், நீதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஸ்டாலின் பங்கேற்கவில்லை
தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கும் முதல்வர்கள், ஆளுநர்களுக்கு மட்டுமே அனுமதி என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கியப் பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. வள ஆதார குறைபாடுகள் இருந்தபோதிலும் சவால்களை உறுதியுடன் சமாளிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்தது. இதற்கான பெருமை மாநில அரசுகளுக்கே உரியது.

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க
மாநில அரசுகள் அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் மக்களுக்கு பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். ஜி.எஸ்.டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு உழைப்பு தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது.

சுதந்திர தினம்
இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தில் முதல் முறையாக, இந்தியாவின் அனைத்து தலைமைச் செயலாளர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மூன்று நாட்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதித்தனர். இந்த கூட்டு செயல்முறை இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வழிவகுத்தது." என்று பிரதமர் மோடி பேசினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications