நான் காங். சுமையை தூக்க தயார்.. ராகுல் பதவியை என்னிடம் கொடுங்க.. முன்னாள் அமைச்சர் ஆஃபர்!
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை இரு ஆண்டுகளுக்கு ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் அஸ்லம் ஷேர்கான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தோற்று போய்விடும் என எதிர்க்கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க் கொடி தூக்கினர்.

போராட்டம்
இதையடுத்து ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சமாதானம் அடைந்த ராகுல் திடீரென முரண்டு பிடிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து டெல்லியில் அவரது வீட்டு முன் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போராட்டம் நடத்தினார்.

ஷேர்கான் கடிதம்
சென்னையிலும் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என ராகுல் விருப்பப்படுகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஷேர்கான் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

பொறுப்பு
அதில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அந்த பொறுப்பு ராகுல் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நீங்கள் கூறியதை நான் அறிவேன்.

விரும்பினால்
இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் தேவை. அக்கட்சிக்கு நம்பிக்கை அளிக்க யாராவது ஒருவர் முன்னோக்கி வர வேண்டும் என நான் நினைத்தேன். ராகுல் காந்தியாகிய நீங்கள் கட்சி தலைவராக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களே தொடருங்கள்.

இரு ஆண்டுகளுக்கு
ஆனால் வேறு யாராவது அதற்கு பொருத்தமானவர் என நீங்கள் நினைத்தால் அந்த வாய்ப்பை நான் ஏற்கிறேன். நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாருக்காவது கொடுக்க நினைத்தால் அதை எனக்கு கொடுங்கள். இந்த பதவியை நான் இரு ஆண்டுகளுக்கு ஏற்கிறேன்.

வாய்ப்பு அளிக்கலாம்
காங்கிரஸுக்கு மக்களுக்கும் இடையேயான தொடர்பு குறைந்ததே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர காரணம். மீண்டும் ஒரு முறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாற்றம் தேவை என்பதில் எந்த சந்தேகமே இல்லை. என்னை காட்டிலும் வேறு யாவராவது தலைமை பதவிக்கு பொருத்தமானவர் என நீங்கள் கருதினால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என ஷேர்கான் தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications