Fact check: வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து?
டெல்லி: வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நாட்டில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்தத் தகவல் வேகமாக இணையதளத்தில் பரவி வருவதால் இது உண்மை தகவலா அல்லது பொய்யானதா என்று தெரியாமல் பொதுமக்கள் பலரும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் ரயில்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியன் ரயில்வேசும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இணையத்தில் ரயில் சேவைகள் ரத்து குறித்துப் பரவும் தகவல்கள் பொய்யானது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், மே மாதம் முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
வெளியான செய்தி
வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து
முடிவு
ரயில் சேவைகள் ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது
ரேட்டிங்
False












Click it and Unblock the Notifications