டிச. 8இல் பாரத் பந்திற்கு விவசாயிகள் அழைப்பு.. வலுவடையும் டெல்லி சலோ போராட்டம்
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வரும் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும் என டெல்லி சலோ விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் போராட்டம் மேலும் வலுப்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடுங்குளிரிலும் இவர்களது போராட்டத்தால் டெல்லியில் அனல் கக்குகிறது. இதுவரை 4 கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் இதில் சுமுக முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதனால் இன்று மதியம் 5-ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வரும் 8-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி லகோவால் கூறுகையில் நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் உருவபொம்மைகள் எரிக்கப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள், விருதுகளை டிசம்பர் 7-ஆம் தேதி விவசாயிகள் திருப்பித் தர உள்ளார்கள்.
வரும் 8-ஆம் தேதி அனைத்து டோல்கேட்டுகளும் விவசாயிகளால் முடக்கப்படும் என்றார். இந்த நிலையில் டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications