6 வது நாளாக போராட்டம்.. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? இன்று 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி உள்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் 6 வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
டெல்லியில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசு அப்போது கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றது.

இந்த நிலையில், வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில கடந்த 13 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா இடையிலான ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விவசாயிகளை வர விடாமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ளனர். அப்பகுதிகளில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு இன்று 6வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 3 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று 4 வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. விவசாயிகளின் 10 கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications