விவசாயிகள் போராட்டத்தை தேச விரோத சக்திகள் கைப்பற்ற முயற்சி - நிர்மலா சீதாராமன்
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்கின்றன என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லி வந்து குவிந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இதுவரை அரசுடன் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது: விவசாயிகள் பயப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு வழங்காமல் இருக்காது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்காமல் இருந்ததில்லை. ஒருவேளை அப்படி வழங்காமல் இருந்திருந்தால் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் விவசாயிகள் தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள். மேலும் விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றன. விவசாயம் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக தற்போது போராட்டம் நடைபெறவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், நக்சல்களால் விவசாயிகளின் போராட்டம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் உணர வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் சட்டத்தில் சில சரத்துக்கள் தங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறி விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. ஒரு கோரிக்கையை வைத்து விட்டு கிளம்பிச் சென்றதும் அந்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது கிடையாது. இதை அவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பதை பார்த்தால் போராட்டம் அவர்கள் கையை விட்டு நழுவி விட்டதாகவே தெரிகிறது.
இந்திய நாட்டின் விவசாயிகள் அமைதியை விரும்புபவர்கள். மக்களுக்கு உணவு வழங்குபவர்கள். எனவே மாவோயிஸ்டுகள் மட்டும் நக்சல் அமைப்பினர் தங்களில் ஊடுருவுவதை அவர்களை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications