'சிவந்த' டெல்லி.. மோடி + அதானி = மோதானி.. மத்திய அரசுக்கு எதிராக முழங்கிய விவசாயிகள்.. என்ன காரணம்?
டெல்லி: மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு உட்பட மூன்று அமைப்புகள் சேர்ந்து டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தியிருக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 10,881 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தற்கொலைகளில் 6.6 சதவிகிதமாகும். தற்கொலை செய்துக்கொண்ட இந்த 10,881 பேரில் 5,318 பேர் விவசாயிகள், 5,107 பேர் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த தற்கொலை பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே மகாராஷ்டிரா கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
இதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் குறைந்தபட்ச ஆதார விலை(சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில்), கடன் பிரச்னை, இயற்கை பேரிடர் இழப்பீடு போன்றவைதான் அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது. தொழிலாளர்களை பொறுத்த அளவில் குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்கப்பட வேண்டும், அனைத்து தொழிலளார்களுக்கும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
மூன்று அமைப்புகள்
எனவே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலளார்களை இந்த கோரிக்கையின் கீழ் இணைத்து இந்திய தொழிற்சங்க மையம் (CITU), அகில இந்திய விவசாயிகள் சங்கம்(AIKS), அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) ஆகிய மூன்று சங்கங்களும் தலைநகர் டெல்லியில் பேரணி நடத்தியுள்ளன. இந்த பேரணிக்காக கடந்த 6 மாத காலமாக இம்மூன்று சங்கங்களும் கிராமங்கள் தோறும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களையும் நகரங்களில் தொழிலாளர்களையும் பிரசாரங்கள், போராட்டங்கள், மனு கொடுக்கும் இயக்கங்கள் என பல வழிகளில் அணி திரட்டி இருக்கின்றன.

பிரமாண்ட பேரணி
இதன் தொடச்ச்சியாதான் தற்போது டெல்லியில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கான தொடங்கி, அசாம், மேற்கு வங்கம் முதல் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் வரை அனைத்து மாநில விவசாயிகளும் பங்கேற்றிருக்கின்றனர். இந்த பேரணிக்கும், பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் ஆகியோர் தலைமையேற்றனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மதுரை எம்பி சு.வெங்கடேசன், கோவை எம்பி நடராஜன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மோடி+அதானி
பொதுக்கூட்டத்தில் உரையாற்றி அசோக் தாவ்லே, "கொரோனா தொற்று நோய் பாதிப்பின் போது மருத்துவமனைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்தனர். மறுபுறம் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு 'மோதானி' (மோடி+அதானி) அரசின் கடமையாகும். ஒருவேளை சரிசெய்ய முடியாவிடில் இவர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின்னர் பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக காந்தி விடுத்த எச்சரிக்கையை இப்போது நாங்கள் இந்த அரசுக்கு எதிராக விடுக்கிறோம்.

பொருளாதார நெருக்கடி
நாடு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கண்ணிமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஆனால் இந்த பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப வெறுப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதி, மத மற்றும் இன மோதல்கள் மூலம் மக்களை பிஸியாக வைத்திருக்கொண்டிருப்பதான் மூலம் பாஜக அரசு தங்கள் செயல்பாடுகளை தீவிரமாக நிறைவேற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.

ஏகபோகம்
இவரைத் தொடர்ந்து பிரபாத் பட்நாயக் கூறுகையில், "விவசாயிகளை பெரும் கார்ப்ரேட்கள் நசுகின்றன. இங்கு 10-20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கூட லாபம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் இவர்களை விட 100-10,0000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கார்ப்ரேட்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக நாசம் செய்துவிடுகிறார்கள். 10-20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலைமையே இப்படி இருக்கும்போது அதற்கும் கீழ் நிலம் வைத்திருப்பவர்கள், விவசாய கூலி தொழிலாளர்களின் நிலமை என்னவாகும்? எனவே வேளாண் துறையில் ஏகபோகம் உடனடியாக உடைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு











Click it and Unblock the Notifications