Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்

    டெல்லி: விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு உயர் அதிகாரி பலியானார்.

    கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தில் இந்த கப்பல் நுழைந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கப்பல் ஊழியர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    Fire on INS Vikramaditya, Navy officer dies

    தீயை அணைக்கும் பணியில் முன்னிலையில் நின்றவர் லெட்டினன்ட் கமாண்டர், சவுகான். இன்ஜின் அறைக்குள் துணிச்சலாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியின்போது நெருப்பு மற்றும் புகை காரணமாக மயங்கி விழுந்துள்ளார் சவுகான்.

    இதையடுத்து உடனடியாக அவர் கார்வார் நகரிலுள்ள கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சவுகானை காப்பாற்ற முடியவில்லை. 30 வயதுதான் ஆன சவுகானுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. ஆனால், சுயநலத்தைவிட தேச நலனை பெரிதாக நினைத்து, தீயணைப்பு பணியில் குதித்தார் சவுகான். அந்த கப்பலில் இருந்த சுமார் 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்துள்ளார் சவுகான்.

    இந்தியாவின் மிகப்பெரிய போர்க் கப்பல்களில் ஒன்றுதான், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. அதில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை குழு தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+