கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் 35 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம் தடாலடி
Recommended Video
டெல்லி: தீபாவளி நாளில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை, அதாவது இரண்டு மணி நேரங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடித்து கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு, முழுமையான தடை விதிக்காமல் இவ்வாறான ஒரு உத்தரவை வழங்கியுள்ளது.
தீபாவளிக்கு மட்டுமே இந்த நிபந்தனைகள் என்றெல்லாம் கிடையாது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு போன்ற பிற மதப் பண்டிகைகளுக்கும் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.
கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினங்களில், இரவு 11.55 முதல் அதிகாலை 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 35 நிமிடங்கள்தான் அனுமதி.
பட்டாசு விற்பனைக்கு முழு தடை கிடையாது.. ஆனால் இந்த நிபந்தனைகள் அவசியம்.. உச்சநீதிமன்றம் அதிரடி
புதிய விதிமுறைகளை யாராவது மீறினால், அதற்கு அந்தப் பகுதியின் காவல் துறை அதிகாரிகள் தான் பொறுப்பாவார்கள் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.