Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் 100 நிமிடங்களில் ஆக்‌ஷன்.. "சி விஜில்" ஆப்பில் புகார் சொல்லலாம்.. தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

‘சி விஜில்’ ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5 மாநில தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் cVIGIL என்ற செயலியை உருவாக்கியுள்ளது.. இந்த cVIGIL செயலி மூலம் அரசியல் கட்சிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது..

விதிமுறைகள்

விதிமுறைகள்

5 மாநிலங்களிலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.. அதேபோல வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது... இந்த 5 மாநில தேர்தல் விதிமுறைகள் குறித்தும், ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்..

 ஆன்லைன்

ஆன்லைன்

அதில், ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்து தரப்படும் என்றும் தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் உறுதி தந்துள்ளார். அதேபோல, வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும் என்றும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

 உறுதி

உறுதி

உத்தரபிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி தரப்படுவதாக கூறிய ஆணையர், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதிக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார். இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் cVIGIL என்ற செயலியை உருவாக்கியுள்ளதாக தேர்தல் ஆணையர் கூடுதலாக தெரிவித்துள்ளார்..

 பதிவிறக்கம்

பதிவிறக்கம்

இந்த cVIGIL செயலி மூலம் அரசியல் கட்சிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம், மேலும் பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வீடியோ, ஆடியோ அல்லது தேர்தல் அத்து மீறலுக்கான ஆதாரங்களையும் பதிவேற்றலாம் என்றும், இந்த ஆப்களில் புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். புகார் வந்த 100 நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பார்கள் என்றும் ஆணையர் நம்பிக்கை கூறியுள்ளார்.

தமிழ்

தமிழ்

கடந்த மார்ச் மாதமே இந்த ஆப் குறித்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.. அதுமட்டுமல்ல, சி விஜில் செயலியில் ஏற்கனவே ஆங்கிலம், இந்தியில் மட்டுமே விவரங்கள் உள்ளன... எனினும், இதில் தமிழில் புகார் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படுமா என்று சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையரிடமே இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, ஒருசில தினங்களில் சி விஜில் செயலியில் தமிழிலும் புகார் பதிவுசெய்யலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

 இலவசங்கள்

இலவசங்கள்

அந்த வகையில் இந்த சி விஜில் ஆப் வரும் தேர்தலில் அறிமுகமாக உள்ளது.. மாதிரி நடத்தை விதிகளை மீறுதல், பணம் விநியோகம் மற்றும் இலவசங்கள் போன்றவை குறித்து இந்த ஆப்-ல் புகாரளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் பணியாளர்கள் குறிப்பாக கிராம உதவியாளர்கள் முதல் மாவட்ட கலெக்டர் வரை அனைத்து வகையான அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ரகசியம்

ரகசியம்


அப்படி இருந்தும் தேர்தல் காலங்களில் விதிமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவே, தேர்தல் ஆணையம் இந்த சி விஜில் செயலியை பயன்படுத்த போகிறது.. இதில், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதி தரப்பட்டுள்ளதால், நிச்சயம், தேர்தல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

வீடியோ

வீடியோ

இந்த ஆப்பை எப்படி உபயோகிப்பது என்பது குறித்தும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.. சி விஜில் செயலியை திறந்ததுமே நம்முடைய மெயில் ஐடி அல்லது போன் நம்பரை பதிவு செய்துவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.. அதன்பிறகுதான், நம்முடைய மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்... பிறகு நம்முடைய புகாரை அதில் தெரிவிக்கலாம்.. அரசியல் வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை பார்த்தால், அதனை போட்டோ அல்லது வீடியோ எடுத்து இதில் ஷேர் செய்தும், நம் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+