வரலாற்றில் முதல்முறை.. இந்த தேர்வையும் இனி தமிழிலேயே எழுதலாம்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு
டெல்லி: சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் தமிழில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வு வரலாற்றில் முதல்முறையாக எஸ்.எஸ்.சி. தேர்வு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருகிற மே 2ம் தேதி எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிஆர்பிஎப் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஆண்டு தோறும் நிரப்பும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு தமிழர்களும் தங்களது தாய் மொழியான தமிழில் தேர்வு எழுத முடியும்.
முன்னதாக எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் தேர்வு வரலாற்றில் முதல்முறையாக இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) பணியில் 10880 இடங்களும் மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) பணியில் 529 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications