பெரிதாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா செல்போனும் ஒட்டு கேட்பு
டெல்லி: சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரது தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேலை சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலமாக உலகின் பல்வேறு தலைவர்களும் உளவு பார்க்கப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் புதிதாக வெளியாகியிருக்கும் செய்தியில், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராஜேஷ் அஸ்தானா ஆகியோரது செல்போன்கள் ஓட்டு கேட்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விசாரணை அமைப்பு சிபிஐ. அந்த அமைப்பின் தலைவர் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டு இருப்பது நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்து கொள்வதற்கு ஈடானது என்பதால் இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக இருக்கிறது.
அலோக் வர்மா மட்டும் கிடையாது அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரது செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. அலோக் வர்மா 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக, சிபிஐ அலுவலகத்திலேயே சிபிஐ சோதனை நடத்தியது. தற்போது அஸ்தானா எல்லை பாதுகாப்பு படை தலைவராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications