ஆர்எஸ்எஸ் விழாவுக்கு தலைமை தாங்கும் ராம்நாத் கோவிந்த்.. இதுக்கு பின்னாடி இவ்வளவு அரசியலா?
டெல்லி: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயதசமி நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பலே திட்டம் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். இவர் வழக்கறிஞராகவும், பாஜக நிர்வாகியுமாக இருந்தார். இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவராக (2017-2022) இருந்தவர் ராம்நாத் கோவிந்த். நாட்டின் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த பெருமையை பெற்றவர் ராம்நாத் கோவிந்த்.

ஆர்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி
இந்நிலையில் தங்களின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ராம்நாத் கோவிந்தை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 வருடங்களாகிவிட்டன. இதையடுத்து அந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஆர்எஸ்எஸ் அமைப்பு விஜயதசமி பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாடும்.
அந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவருடன், ஒரு முக்கிய பிரமுகரை சிறப்பு விருந்தினராக அழைக்கும். கடந்த காலங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விஜய தசமி நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறது என்பது அரசியல் களத்தில் கவனிக்கப்படும்.
சிறப்பு விருந்தினராக ராம்நாத் கோவிந்த்
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை 7.40 மணியளவில் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா நடைபெறும். இதில் நம் இயக்க தலைவர் மோகன் பகவத் உரையாற்றுவார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்." என்று கூறியுள்ளனர்.
பின்னணி அரசியல்
இது அரசியல் ரீதியாக விமர்சனமாகியுள்ளது. அதேநேரத்தில் ஆர்எஸ்எஸின் இந்த நகர்வுக்கு பின்னால் பெரிய அரசியல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கான அடித்தளத்தை ஆர்எஸ்எஸ் அமைத்து கொடுத்தாலும், அந்த இயக்கம் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக விமர்சனம் உள்ளது. அதை மாற்றுவதற்கு அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தான் ராம்நாத் கோவிந்தை தங்களின் சிறப்புமிக்க விஜயதசமி விழாவுக்கு விருந்தினராக அழைத்துள்ளனர். இதன் மூலம் தாங்கள் அனைவருக்கும் சமமானவர்கள் என்பதை உணர்த்துவதற்காக ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதாக தேசிய அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications