பிரதமர் மோடியை சந்தித்த முன்னாள் பிரதமர் தேவகவுடா..! என்ன பேசினார்கள்?
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் பாரதப் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சந்தித்து பேசினார்..
டெல்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் விவசாய சட்டங்கள் வாபஸ் குறித்து எழுந்த தொடர் அமளியால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன..
ராஜ்யசபாவில் இரண்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் இன்று பிற்பகலுக்கு பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவை இன்று சந்தித்தேன் சந்திப்பு சிறப்பானதாக இருந்து என்று பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் செல்பி- சர்ச்சையில் சிக்கி பல்டி அடித்த சசி தரூர்