அடிமேல் அடி: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி: உச்சநீதிமன்றம் மறுப்பு
தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பெண் காவல் அதிகாரிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விழுப்புரம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரியதையும் ஏற்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை
தமிழக சிறப்பு டிஜிபி பாதுகாப்பு பணியின் போது தனக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகாரின் பேரில் தமிழக அரசிடம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். புகாரை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா லமிட்டி போடப்பட்டது. உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு எழுப்பிய கேள்வி அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபியும், அவருக்கு உதவிய எஸ்.பி கண்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

விசாகா கமிட்டி, சிபிசிஐடி போலீஸ் விசாரணை
காவல்துறை விசாரணை அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு எதிரான விசாகா கமிட்டி அதிகாரிகளுக்கு எதிராகவும், விழுப்புரம் நீதிமன்ற வழக்கை மாற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டது.

வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற கோரிக்கை
இந்நிலையில் தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் நெல்லூர் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "இந்த வழக்கு தமிழகத்தில் நியாயமான முறையில் விசாரணை நடக்கவில்லை.
தொடர்ந்து தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் தனது தரப்பு நியாயங்களை, வாதங்களை முழுமையாக எடுத்து வைக்க முடியாது என்பதால் இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும்.

விழுப்புரம் நீதிமன்ற வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை
அதேபோல சம்பவம் தொடர்பாக விசாரணை வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகின்றது என்பதால் அங்கு நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு.லலித், ரவீர்ந்தர பாட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஸ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி "இந்த வழக்கு நாமக்கல் உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் சம்பந்தப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் மட்டும் வழக்கின் விசாரணை நடத்துவது என்பது அதன் அதிகார வரம்பிற்கு மீறியது, மேலும் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற இதனை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கையில் முகாந்திரம் இல்லை - உச்ச நீதிமன்றம்
வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தவிதமான முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட ராஜேஷ் தாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வழக்கின் விசாரணையை சென்னைக்காவது மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அனைத்து கோரிக்கையும் தள்ளுபடி
அதற்கு நீதிபதிகள், இதெல்லாம் ஒரு காரணமா? இது தொடர்பாக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி வழங்கியதோடு, மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக தனக்கு எதிரான இந்த பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications