Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 முதல் 12 மணி நேரம் வேலை வாங்க அனுமதி.. 4 சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்த மத்திய அரசு.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஒருநாளில் 8 முதல் 12 மணி நேரம் வரை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. வாரத்திற்கு ஒரு பணியாளரிடம் அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்ற சட்ட வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டதோடு, தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே ஓவர் டைம் முறையில் வாங்க வாங்கலாம் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

4 தொழிலாளர் சட்டங்களை இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிட பாதுகாப்பு சட்டம் என்று 4 புதிய தொழிலாளர்கள் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே அமலில் உள்ள 29 தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாற்றாக இந்த 4 தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Labour Codes BJP

இந்தியாவில் மாறி வரும் பணிச் சூழல்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலத்திற்கு பொருந்தாத சட்டங்களுல்கு பதில் நவீன நிலைமைக்கு ஏற்ப சட்டம் இயற்றப்படுள்ளதாகவும், தொழிலாளர்கள் நலனை உறுதிப்படுத்துவது, எதிர்காலத்திற்கு ஏற்ப தொழிலாளர்களை உருவாக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொழில்கள் நீடித்து இயங்குவதை உறுதி செய்வதும் தொழிலாளர் சட்டங்களின் நோக்கம் என்றும், 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிலதிபர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளும் புதிய சட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, 1. வேலையில் சேரும் போதே தொழிலாளர்களின் பணிக் காலத்தை தொழிலதிபர்கள் நிர்ணயித்து நியமனம் செய்யலாம். அதேபோல் ஓராண்டு பணிபுரிந்தாலே கிராஜுவிட்டு எனப்படும் பணிக்கொடை பெற தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்வதுடன், ஒப்பந்தப் பணியாளர்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் இடையில் பாலின வேறுபாடு காட்டப்படுவதை தடுக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது. அதேபோல் பாலியன வேறுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் அளிப்பதையும் புதிய சட்டம் உறுதி செய்கிறது. அதேபோல் அனைத்து தொழிலகாளிலும் இரவு ஷிப்ட்களில் பெண்களை பணிபுரிய வைக்க அனுமதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

அதேபோல் நிலத்தடி சுரங்கங்களில் பணிபுரிய தயாராக இருக்கும் பெண்களை அப்பணியில் ஈடுபட வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பீடித் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை புதிய சட்டம் நிர்ணயித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் எனப்படும் பணி நியமன உத்தரவு கடிதம் அளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஒருநாளில் 8 முதல் 12 மணி நேரம் வரை தொழிலாளர்களிடம் வேலை வாங்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஒரு பணியாளரிடம் அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். அதேபோல் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே ஓவர் டைம் முறையில் வேலை வாங்கலாம். அதேபோல் 180 நாட்களுக்கு பின் வருடாந்திர விடுமுறை, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+