ரூ500,1000 நோட்டுகள் தீர்ப்பு முதல் தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரை.. 2023-ல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

2 ஜனவரி: 2016-ல் அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

From Rs 500, 1000 Notes Verdict to Telangana Chief Minister Revanth Reddy What happened in 2023? Complete Timeline

4 ஜனவரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா காலமானார்.

12 ஜனவரி: முதுபெரும் வட இந்திய அரசியல் தலைவர் சரத் யாதவ் காலமானார்.

18 ஜனவரி - இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனுக்கு (WFI) எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம்

பிப்ரவரி 26 - டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

2 மார்ச் - திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை உருவானது.

2 மார்ச்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்

மார்ச் 18 - காலிஸ்தான்- சீக்கியர் தனிநாடு கோரும் "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற அமைப்பு மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது. பஞ்சாப் போலீசாரால் 112 பேர் கைது செய்யப்பட்டனர்

23-24 மார்ச் - மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

31 மார்ச் - ம.பி. இந்தூர் கோவிலில் கிணறு படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி.

4 ஏப்ரல் - சிக்கிம், நாது லாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் பலி.

12 ஏப்ரல்- பஞ்சாபில் ராணுவ தளம் மீதான தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

15 ஏப்ரல் - மகாராஷ்டிராவின் ராய்காட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 12 பேர் பலி.

15 ஏப்ரல் - உ.பி. பிரயாக்ராஜில் நடந்த என்கவுண்ட்டரில் நிழல் உலக தாதா அட்டிக் அகமது, அஷ்ரஃப் அகமது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 23 - காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் சரணடைந்ததால் கைது செய்யப்பட்டார்.

3 மே - 2023: மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையே மோதல் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

10-13 மே - 2023 கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

19 மே - 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

28 மே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்பட்டது.

மே 30 - ஜம்மு காஷ்மீரில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

2 ஜூன்: ஒடிஷாவில் ரயில்கள் மோதியதில் 280 பேர் கொல்லப்பட்டனர்; 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

17 ஜூன் - உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வெப்பத்தால் 96 பேர் மரணம்.

1 ஜூலை: மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 26 பேருந்து பயணிகள் இறந்தனர்.

12 ஜூலை - இமாச்சல்மற்றும் பஞ்சாபில் வெள்ளம்- 41 பேர் பலி.

18 ஜூலை - பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி உதயம்.

19 ஜூலை: பெங்களூரில் 5 பயங்கரவாதிகள் கைது

31 ஜூலை: ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் உயர் அதிகாரி மற்றும் மூன்று பொதுமக்களைக் கொன்றார்.

2023 ஹரியானாவில் வன்முறை வெடித்தது.

ஆகஸ்ட் 4 - டெல்லியில் அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 7 - ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி திரும்ப வழங்கப்பட்டது.

23 ஆகஸ்ட்: சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென் துருவம் அருகே தரை இறங்கியது.

1 செப்டம்பர் - மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

2 செப்டம்பர் - சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

செப்டம்பர் 9-10 - டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்றது.

19 செப்டம்பர் - சட்டசபை , நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

4 அக்டோபர் - சிக்கிம் மேக வெடிப்பு காரணமாக குறைந்தது பெரும் வெள்ளம்- 74 பேர் பலி

17 அக்டோபர் - ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

29 அக்டோபர் - கேரளாவின் கலமசேரியில் யெகோவாவின் சாட்சிகளின் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு- 6 பேர் பலி

29 அக்டோபர்: ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மோதி ஒருவர் பலி.

நவம்பர் 7 - மிசோரம், சத்தீஸ்கர் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

15 நவம்பர் விபத்து: ஜம்மு மற்றும் காஷ்மீர், தோடா மாவட்டத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து 39 பேர் கொல்லப்பட்டனர்

17 நவம்பர்: மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் 2-வது கட்ட தேர்தல் நடைபெற்றது

25 நவம்பர்- ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற்றது.

29 நவம்பர் - உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் இருந்து 41 கட்டுமானத் தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

30 நவம்பர்- தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற்றது.

டிசம்பர் 3: சத்தீஸ்கர், ராஜஸ்தான், மபி தேர்தலில் பாஜக வென்றது; தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது; மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வென்றது

டிசம்பர் 3,4- மிக்ஜாம் புயல் சென்னையில் பெருமழை வெள்ளத்தைக் கொட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னை மாநகரும் புறநகரும் தத்தளித்தது

டிசம்பர் 7- தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+