வேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
டெல்லி: நாட்டில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், நாட்டிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினரும் நாளை முதல் தடுப்பூசியைச் செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வளாகம் அல்லது மருத்துவமனை என விரும்பும் இடத்தில் நீதிபதிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் நீதிபதிகள் ரூ.250ஐ செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தங்களுக்கு என்ன தடுப்பூசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் பரவியது.
ஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள சுகாதார துறை, நீதிபதிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்க முடியாது என்றும் கோ-வின் செயலியே தடுப்பூசிகளை முடிவு செய்யும் என்றும் விளக்கமளித்துள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications