3 நாள் பயணமாக இன்று தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி - ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 21 ஆம் தேதி) தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் செல்கிறார். இந்த ஜி20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நவம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரை ஜி20 நாடுகளின் தலைவர் பங்கேற்கும் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 21) தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறார். இந்த ஜி20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். இதில், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 23 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications