அமெரிக்க சட்ட சவால்களை கடந்துவிட்டோம்.. ஏஐ-யில்தான் இனி கவனம்! கவுதம் அதானி நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் எதிர்கொண்ட சட்ட மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் தற்போது கடந்த காலமாகிவிட்டதாக தெரிவித்துள்ள அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, இனி செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறைகளில் விரிவாக்க நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

அதானி குழுமம், அமெரிக்க சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டு தற்போது அதை கடந்துவிட்ட நிலையில், ஆற்றல், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற முக்கியத் துறைகளில் தொடர்ந்து விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

Gautam Adani Says US Legal Challenges Are Behind Him Focus Shifts to AI and Infrastructure Growth

கடந்த காலமாகிவிட்டன

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. தனது பங்குதாரர்களுக்கு எழுதிய வருடாந்திர கடிதத்தில் கவுதம் அதானி தனது குழுமத்தின் சாதனைகள், திட்டமிடல் உள்ளிட்டவைகளை பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். கவுதம் அதானி கூறியிருப்பதாவது:-

கடந்த ஓராண்டாக அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை எதிர்கொண்டபோதிலும், குழுமம் தனது விரிவாக்கத் திட்டங்களில் உறுதியாக இருந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் தற்போது கடந்த காலமாகிவிட்டன. இதன் மூலம் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.24,930 கோடி மதிப்பிலான உரிமைப் பங்கு வெளியீடு (Rights Issue) வெற்றிகரமாக நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான கேள்விகள் எழுந்திருந்த காலகட்டத்திலும் முதலீட்டாளர்கள் குழுமத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்கான சான்றாகும்" என்று கூறியுள்ளார்.

நாங்கள் தளரவில்லை

அதானி தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:- உலகம் மேலும் பிளவுபட்டதாகவும், சிக்கலானதாகவும் மாறிய ஒரு ஆண்டாக இது இருந்தது. எரிசக்தி பாதுகாப்பு மீண்டும் தேசியத் திட்டங்களின் மையமாக மாறியது. தொழில்நுட்பம் இறையாண்மையுடன் இணைந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் எதிர்காலம் காத்திருக்க முடியாது என்ற நம்பிக்கையில் அதானி குழுமம் உறுதியாக இருந்தது. மற்றவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, எரிசக்தி, போக்குவரத்து, தளவாடம், பயன்பாட்டு சேவைகள் மற்றும் தொழில்துறை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் உலகின் மிகவும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு தளமாக உருவாகும் பயணத்தை குழுமம் தொடர்ந்து முன்னெடுத்தோம்.

இது அமைதியான சூழ்நிலையில் கிடைத்த முன்னேற்றமல்ல. அபூர்வமான அளவிலான ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களின் மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் தளரவில்லை. இடைநிறுத்தமும் செய்யவில்லை. தேச கட்டமைப்பில் எங்கள் நம்பிக்கையே எங்களை முன்னோக்கி நகர்த்துகிறது" என்றார். கடந்த 2024 இறுதியில் இருந்து குழுமத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் குறித்து கவுதம் அதானி கூறும் போது, "அமெரிக்க சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்கள் தற்போது முடிந்துவிட்டன.

இதனால் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் புதிய நம்பிக்கையுடனும் உறுதியுடனும் கவனம் செலுத்த முடிகிறது. உள்கட்டமைப்பு" மற்றும் "நுண்ணறிவு" என்ற இரண்டு முக்கிய வளர்ச்சி இயக்கிகளையே மையமாகக் கொண்டு செயல்படுகிறோம். செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி, மின்சார உற்பத்தி, மின் பரிமாற்ற வலையமைப்பு, தரவு மையங்கள் மற்றும் தளவாட உள்கட்டமைப்புகளில் மிகப்பெரிய முதலீடுகளைத் தேவைப்படுத்தும் எதிர்கால தொழில்நுட்ப முன்னணி நிலை மென்பொருள் மற்றும் டிஜிட்டல் புதுமைகளால் மட்டுமல்ல, வலுவான உட்கட்டமைப்புகளாலும் தீர்மானிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு சிந்திக்கத் தொடங்குவதற்கு முன், ஆற்றல் பாய வேண்டும்"என்றார்.


ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு

2025-26 நிதியாண்டில், அதானி குழுமம் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் பரிமாற்றம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தரவு மையங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதானி கிரீன் நிறுவனம் ஆண்டில் 5.1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்த்ததன் மூலம் அதன் மொத்த செயல்பாட்டு திறன் 19 ஜிகாவாட்டைத் தாண்டியது. அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் முன்னோடி திட்டத்தையும் தொடங்கியது.

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மின் பரிமாற்ற ஆர்டர் மதிப்பு ரூ.71,779 கோடியாக உயர்ந்தது. அதானி பவர் நிறுவனம் 2032ஆம் நிதியாண்டுக்குள் மின் உற்பத்தித் திறனை 42 ஜிகாவாட்டாக உயர்த்தும் நோக்கில் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான விரிவாக்கத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2032 நிதியாண்டிற்குள் மின் உற்பத்தி திறனை 42 GW ஆக உயர்த்துவதே இதன் இலக்கு. டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தேவை

2030க்குள் 2-GW தரவு மைய தளம் அமைக்கும் திட்டமும் உள்ளது. விசாகப்பட்டினத்தில் பெரிய தரவு மையத்திற்காக கூகிளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதானி போர்ட்ஸ் அந்த ஆண்டில் 500 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டது. குழுமத்தின் விமான நிலைய வணிகம் வெற்றிகரமாக செயல்பட்டது.

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது. கவுகாத்தி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டது. எதிர்கால சவாலாக, மூலதனம் பெறுவது முக்கியமில்லை, மாறாகத் திட்டங்களை வேகமாகச் செயல்படுத்துவதே முக்கியம் என்று அதானி கூறினார். AI ஆற்றல் மிகுந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான தேவையை அதிகரிக்கும். இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் இது இணைக்கப்படவும் உள்ளது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதே தற்போது குழுமத்தின் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அதானி கூறினார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+