கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கிழக்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து டெல்லி கிழக்கு, லோக்சபா தொகுதியில் போட்டியிட பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்கியது.

Gautam Gambhir will face case for rally without permission

தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் கம்பீர். கடந்த 25ம் தேதி, டெல்லியின் ஜன்க்புரா பகுதியில், இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், இதற்காக தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெறவில்லை.

இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், தேர்தல் ஆணையத்திடம் புகார் சென்றது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம், கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, கிழக்கு டெல்லி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு டெல்லி சிட்டிங் எம்பியான பாஜகவின் மகேஷ் கிரிக்கு பதிலாக கம்பீருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் மேகேஷ் கிரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியைவிட கடந்த தேர்தலின்போது, 190,400 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+