ஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020-21 நிதியாண்டிற்கான, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக மந்தநிலையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளா
டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவிகிதமாக இருந்தது.
பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது. இந்த அடிப்படை உண்மையை பிரதமர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.
2020-21ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 33.14 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-20ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் ரூ 35.84 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 4.4% வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 7.5% சரிவை காட்டுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் -23.9 சதவிகிதம் சரிந்தது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ மந்தநிலையில் இந்தியா தற்போது இருப்பது உறுதியாகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த புதன்கிழமை இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீட்கும் வேகத்தில் வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.9 சதவிகிதம் சரிவை நாடு கண்டபின், இரண்டாம் காலாண்டில் வேகமெடுத்துள்ளதாக சக்தி காந்த தாஸ் மேற்கோள் காட்டினார்.
இந்த நிலையில் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருக்கம் ஏற்படக்கூடும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை முன்பு கூறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பொருளாதார மந்தநிலை பற்றி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக மந்தநிலையில் உள்ளது.மிக முக்கியமாக, MNREGA இன் கீழ் 3 கோடி மக்கள் இன்னும் வேலை தேடுகிறார்கள். பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது. இந்த அடிப்படை உண்மையை பிரதமர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications