உலக நாடுகளிக் கொரோனா பாதிப்பு 40 கோடியை தாண்டியது- ஜெர்மனியில் அதிஉச்சம்!
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 கோடியை தாண்டியுள்ளது. ஜெர்மனியில் ஒரே நாளில் 2,47,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் 23,90,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,664 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 2,747,244 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 406,056,754 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,807,332 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் ஜெர்மனியில்தான் நேற்று அதிகபட்சமாக 247,128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. ஜெர்மனியை தொடர்ந்து ரஷ்யாவில் 197,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்களில் அமெரிக்காவில்தான் அதி உச்சமாக 2,322 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications