Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் கிரிஜா வைத்தியாநாதன், சத்யகோபால்.. மாத ஊதியம் ரூ.2,25,000!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கிரிஜா வைத்தியாநாதன், சத்யகோபால் ஆகியோர் உள்பட 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2,25,000 என நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளராக ராம்மோகன ராவ் இருந்தார். 2016ல் தலைமைச் செயலக அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக அவர் மாற்றப்பட்டார். அதன்பிறகு தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அவர் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

4 ஆண்டுகள் பதவி காலம்

4 ஆண்டுகள் பதவி காலம்

இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்களாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

ஐஏஏஸ் அதிகாரிகள்

ஐஏஏஸ் அதிகாரிகள்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர சென்னையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், மேலும் 3 இடங்களில் பசுமை தீர்ப்பாய கிளையும் செயல்பட்டு வருகிறது. பொதுவாக தேசிய பசுமை தீர்ப்பாய கிளைகளில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நீதித்துறை உறுப்பினராகவும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நிபுணர் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவது வழக்கம்.

சத்யகோபால் நியமனம்‘

சத்யகோபால் நியமனம்‘

அதன்படி தான் தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எவ்வளவு ஊதியம்

எவ்வளவு ஊதியம்

இவர்களுடன் ஐ.எப்.எஸ். அதிகாரியான அருண் குமார் வர்மா என்பவரும் பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான துறை பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இவர்கள் மூவரையும் நியமித்துள்ளது. இவர்களுக்கு மாத சம்பளம் 2,25,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+