டிசம்பரில் ஆபத்து.. பல கோடி பேரின் இமெயில் கணக்கை நீக்கும் கூகுள்! ஏன்? அலர்ட்டா தப்பிப்பது எப்படி
டெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் நமதுக்கு இ-மெயில் கணக்குகள் முடக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய விஷயம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் இ-மெயில் முகவரி வைத்துள்ளோம். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இ-மெயில் முகவரி வைத்திருப்போம். இதில் பலரும் அனைத்து இ-மெயில் முகவரிகளையும் பயன்படுத்துவது இல்லை.

ஏதாவது ஒன்று அல்லது இரண்டை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருப்போம். மற்றவற்றை நாம் பயன்படுத்தாமல் இருப்போம். இப்படி உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் இ-மெயில் கணக்குகளை திறந்து பயன்படுத்தாமல் உள்ளனர்.
மேலும் இ-மெயில் முகவரி வைத்திருக்கும் தினசரி இறந்தும் வருகின்றனர். இதனால் ஏராளமான இ-மெயில் முகவரிக்கு தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இத்தகைய இ-மெயில் முகவரிகளை முடக்க உள்ளதாக ஜிமெயிலின் தலைமை நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக சைன்இன் செய்து பயன்படுத்தப்படாமல் உள்ள இமெயில் கணக்குகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செயல்முறை அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்க உள்ளது. இது மக்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் முகவரிகளை குறிவைத்து மோசடிகள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் நீக்கப்பட்டு விடும். மேலும் ஒரு குறிப்பிட்ட இமெயில் கணக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அதனை நீக்கம் செய்வது தொடர்பாக முதலில் கூகுள் அலர்ட் செய்யும். அதன்பிறகே அந்த இ-மெயில் முகவரி நீக்கம் செய்யப்படும்.

அதன்படி அடுத்த மாதம் மட்டம் பல கோடி பேரின் இமெயில் முகவரிக்கும் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து நாம் எளிதாக தப்பிக்கலாம். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இ-மெயில் கணக்கை திறந்து அதில் இருந்து சில இ-மெயில்களை பிறருக்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பும் பட்சத்தில் அந்த இ-மெயில் கணக்கு நீக்கப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications