கொரோனா கண்டறிய சிடி ஸ்கேன் வேண்டாம்.. கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தொற்றைக் கண்டறிய மருத்துவர்கள் ஆலோசனையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என எய்ம்ஸ் ரன்தீப் குளோரியா இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் கொரோனா 2ஆம் அலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் இருந்தும் RT PCR சோதனைகளில் கொரோனா நெகடிவ் முடிவுகள் கிடைக்கும் சிலர் சிடி ஸ்கேன், ரத்த சோதனை ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இருப்பினும், மருத்துவர் அறிவுரையின்றி சிடி ஸ்கேன் எடுக்கக் கூடாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குளோரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரன்தீப் குளோரியா கூறுகையில், கொரோனா அறிகுறி இருந்தும், RT PCR சோதனைகளில் கொரோனா நெகடிவ் முடிவுகள் வரும் சுமார் 40% சிடி ஸ்கேன் எடுக்கிறார்கள். ஆனால் ஒரு சிடி ஸ்கேன் என்பது 300 முதல் 400 எக்ஸ்ரேக்களுக்கு சமம். அதிகப்படியான கதிர் வீச்சு காரணமாக சிடி ஸ்கேன் எடுப்பவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, இதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபயமும் உள்ளது.

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவுகள் வந்தால் முதலில் எக்ஸ்ரே எடுங்கள். உங்களுக்கு சிடி ஸ்கேன் தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர் கூறுவார். மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவற்றை எடுக்கத் தேவையில்லை
லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்குச் சாதாரண மருந்துகளே போதும் அவர்கள் ஸ்டெராய்டுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ஸ்டெராய்டுகள் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications