எங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓபன் செய்யாதீங்க.. கூகுள் வார்னிங்.. ஏன் தெரியுமா?
டெல்லி: வாட்ஸ்அப் செயலியில், இஸ்ரேலிய மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 500 பயனர்கள் உட்பட உலகளாவிய அளவில் 12,000 கூகுள் பயனாளர்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியே வந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே, இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த தகவலை, கூகுளின், அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழுவின் (TAG) ஷேன் ஹன்ட்லி ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட பயனர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இமெயில்கள் வழியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, உண்மையான கூகுள் நிறுவனத்திலிருந்து வருவது போன்ற மின்னஞ்சலை மோசடியாளர்கள் அனுப்புகிறார்கள். என்ன ஒன்று.. கூகுள் என்பதற்கு பதில், Goolge என்று இருக்கும். அல்லது இதேபோன்ற சிறு வேறுபாடு இருக்கும். இதை இமெயில் ரிசீவ் செய்பவர்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை.

இமெயில் பயனர், அதில் வரும், இணைப்பைக் கிளிக் செய்ததும், அவர்களின் கடவுச்சொல் உள்ளிட்ட பல விவரங்களை உள்ளிடுவார். அப்போது பயனாளியின் முழு விவரம் திருடப்படும். பணம் அபேஸ் செய்யப்படும். பெரும்பாலும் உங்கள் அக்கவுண்டுக்கு ஆபத்து, என செக்யூரிட்டி அலர்ட் வடிவத்தில்தான் இந்த மோசடி லிங்க்குகள் அனுப்பப்படுகிறது.
இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டின், சைபர் தாக்குதல்கள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சஞ்சய் தோத்ரே, "இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) அறிக்கை மற்றும் கண்காணித்த தகவல்களின்படி, 2016ல் 50,362, 2017ல், 53.117, 2018ம் ஆண்டில், 208.456 சைபர் அட்டாக் வழக்குகள் பதிவாகியுள்ளன" என்று கூறியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications