ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா? - ப.சிதம்பரம் கண்டனம்
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் ஜெய்சங்கர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தினசரியும் 4 லட்சம் பேராக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கின்றனர்.

செங்கல்பட்டு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாட்டில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. தினந்தோறும் நம் அண்டை வீட்டினர், அன்புக்குரியவர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை தேடும் நூற்றுக்கணக்கான மக்களின் நிறைய கதைகள் உள்ளன
என்று பதிவிட்டுள்ளார். எனக்கும் ஒரு கதை உள்ளது என் நண்பர்களுக்கும் பல கதைகள் உள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் இளைஞரணி மே 1 அன்று ஒரு சிறந்த உண்மையான வாழ்க்கைக் கதையைக் கொண்டிருந்தது. சகிப்புத்தன்மையற்ற அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அறிவார்ந்த அமைச்சர்கள் ஏன் பக்தர்களாக மாறுகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications